sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மின்தடையை கண்டித்து சாலை மறியல்

/

மின்தடையை கண்டித்து சாலை மறியல்

மின்தடையை கண்டித்து சாலை மறியல்

மின்தடையை கண்டித்து சாலை மறியல்


ADDED : ஆக 13, 2024 06:22 AM

Google News

ADDED : ஆக 13, 2024 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டமங்கலம்: கண்டமங்கலம் பகுதியில் மின் தடையை கண்டித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கண்டமங்கலம் அடுத்த வனத்தாம்பாளையம் ஏரி பகுதியில் சவுக்கு தோப்பில் கடந்த 9ம் தேதி காலை 11:00 மணிக்கு மின் கம்பி அறுந்து விழுந்தது. அதேபோல் சேஷாங்கனுார் வயல்வெளி பகுதியில் மரவள்ளி தோட்டத்தில் மின்கம்பி அறுந்து விழுந்தது.

இதனால் வனத்தாம்பாளையம், குயிலாபாளையம், சேஷாங்கனுார் மற்றும் பி.எஸ்.பாளையம் ஆகிய நான்கு கிராமங்களில் 9ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை 3 நாட்கள் மின்சார வினியோகம் முற்றிலும் தடைபட்டது. மின்சாரம் தடைபட்டதால் குடிநீர் வினியோகமும் இல்லாததால் கிராம மக்கள் மிகவும் அவதிக்குள்ளாயினர்.

இதனைக் கண்டித்து நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு வனத்தாம்பாளையம் கிராம மக்கள் திருவாண்டார்கோவில் - பெரிய பாபுசமுத்திரம் சாலையில் அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டமங்கலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

அதனைத் தொடர்ந்த, மின்வாரிய ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அன்று மாலை 4:00 மணியளவில் மின் விநியோகம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us