sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

செம்மண் குவாரி வழக்கு ஏப்ரல் 3க்கு ஒத்திவைப்பு

/

செம்மண் குவாரி வழக்கு ஏப்ரல் 3க்கு ஒத்திவைப்பு

செம்மண் குவாரி வழக்கு ஏப்ரல் 3க்கு ஒத்திவைப்பு

செம்மண் குவாரி வழக்கு ஏப்ரல் 3க்கு ஒத்திவைப்பு


ADDED : மார் 15, 2025 02:42 AM

Google News

ADDED : மார் 15, 2025 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்:விழுப்புரம் கோர்ட்டில் நடந்து வரும் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை வரும் ஏப்ரல் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பூத்துறையில் அரசு செம்மண் குவாரியில், விதிமுறை மீறி செம்மண் வெட்டி எடுத்து அரசுக்கு 28.36 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உட்பட எட்டு பேர் மீது 2012ல், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர்.

இவ்வழக்கு, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

தற்போது சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் 67 பேர், அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர்.

அவர்களில், இதுவரை 51 பேர் சாட்சியம் அளித்துள்ளளனர். அதில், 30 பேர் அரசு தரப்புக்கு எதிராக, பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.

நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயச்சந்திரன், கோபிநாதன், சதானந்தம், கோதகுமார் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

வழக்கு விசாரணைக்கு, அரசு தரப்பு சாட்சிகள் ஆஜராகவில்லை. அதையடுத்து, இவ்வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி மணிமொழி, விசாரணையை ஏப்ரல் 3ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us