sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு குவாரி உரிம ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவு

/

பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு குவாரி உரிம ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவு

பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு குவாரி உரிம ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவு

பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு குவாரி உரிம ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவு


ADDED : ஜூன் 26, 2024 10:57 PM

Google News

ADDED : ஜூன் 26, 2024 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்:விழுப்புரம் கோர்ட்டில் நடந்து வரும் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், குவாரிக்கு உரிமம் வழங்கிய ஆவணங்களை, வருவாய்த்துறையினர் கோர்ட்டில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா பூத்துறையில் அரசு செம்மண் குவாரியை, ஏலம் எடுத்து, அதில், விதிமீறி செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது, கடந்த 2012ம் ஆண்டு, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை 33 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில், அதில் 26 பேர் அரசு தரப்புக்கு எதிராக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். தொடர்ந்து, சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.

நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சதானந்தன், கோபிநாத், ஜெயச்சந்திரன் ஆகிய 3 பேர் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன், கோதகுமார் ஆஜராகவில்லை. சாட்சிகளும் ஆஜராகவில்லை.

இந்நிலையில், பூத்துறை செம்மண் குவாரிக்கு உரிமம் வழங்கியது தொடர்பான ஆவணங்களை, விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்திலிருந்து தர வேண்டும் என்று, கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன் ஆகியோர், ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.

அந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி பூர்ணிமா, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கேட்டுள்ள, வழக்கு தொடர்பான ஆவணங்களை, விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இருந்து கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என, உத்தரவிட்டார். தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 1ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.






      Dinamalar
      Follow us