/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு வழிபாடு
/
மயிலம் முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு வழிபாடு
ADDED : ஏப் 15, 2024 01:26 AM

மயிலம் : மயிலம் முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
அதனையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு பால், சந்தனம், பஞ்சாமிர்தம், தயிர் உள்ளிட்ட பொருட்களினால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. 11:00 மணிக்கு விநாயகர், பாலசித்தர், மூலவருக்கு மகா தீபாராதனை நடந்தது.
மதியம் 12:00 மணிக்கு மூலவர் தங்கக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 1:00 மணிக்கு கோவில் மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவு 9:00 மணிக்கு உற்சவர் கிரிவலம் நடந்தது. புத்தாண்டு வழிபாட்டில் விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

