ADDED : நவ 01, 2025 03:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் ரோஷணை போலீசார் நேற்று மாலை, ரோஷணை பாட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள செந்தில்ராஜ், 49; என்பவரின் பங்க் கடையில் சோதனை நடத்தினர்.
இதில் அவரது கடையில் 500க்கு மேற்பட்ட பாக்கெட்டுகள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. பிடிபட்ட அவரிடம் விசாரித்த போது, திண்டிவனம் ஹாஸ்பிட்டல் ரோட்டை சேர்ந்த தட்சிணாமூர்த்தி, 25; என்பவரிடமிருந்து குட்கா பொருட்களை வாங்கியது தெரியவந்தது. இதன் பேரில், ரோஷணை போலீசார் செந்தில்ராஜ், தட்சிணாமூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

