ADDED : அக் 11, 2024 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மின்னல் தாக்கியதில் பசுமாடு இறந்தது.
விக்கிரவாண்டி அடுத்த திருநந்திபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் மனைவி மங்கையர்கரசி, 44: நேற்று காலை 11:30 மணியளவில் தனது வயலில் பசு மாட்டை மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது மின்னல், இடியுடன் மழை பெய்தது. இதில், மின்னல் தாக்கியதில் வயலில் மேய்ந்த பசுமாடு இறந்தது.
தகவலறிந்த திருநந்திபுரம் வி.ஏ.ஓ., மேரி ஜாஸ்மின், புதுப்பாளையம் கால்நடை டாக்டர் சுந்தரேசன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.