sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பைக்கில் வந்தவருக்கு மிரட்டல்: தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு 

/

பைக்கில் வந்தவருக்கு மிரட்டல்: தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு 

பைக்கில் வந்தவருக்கு மிரட்டல்: தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு 

பைக்கில் வந்தவருக்கு மிரட்டல்: தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு 


ADDED : நவ 10, 2025 11:10 PM

Google News

ADDED : நவ 10, 2025 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே வாலிபரை 3 பேர் சேர்ந்து மிரட்டியதால் வாலிபர் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விக்கிரவாண்டி அடுத்த வடகுச்சிப் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செம்மனேரி மகன் கஜினி, 18; இவர், கடந்த 6ம் தேதி தனது பைக்கில் விழுப்புரம் அடுத்த சிந்தாமணி கிராமம் ஏரிக்கரை பகுதியில் சென்ற போது எதிரே பைக்கில் வந்த 3 பேர் கஜினியின் பைக்கை உரசியடி சென்றனர்.

இதை கஜினி தட்டிக்கேட்டபோது 3 பேரும் தாக்கி மிரட்டியுள்ளனர். இதனால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்த கஜினி நேற்று முன்தினம் தனது வீட்டில் துாக்கு போட்டுக் கொண்டார். உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

விழுப்புரம் தாலுகா போலீசார், வழக்குப் பதிந்து கஜினியை மிரட்டிய அந்த 3 பேரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us