sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மதுபாட்டில் கடத்தியவர் கைது

/

மதுபாட்டில் கடத்தியவர் கைது

மதுபாட்டில் கடத்தியவர் கைது

மதுபாட்டில் கடத்தியவர் கைது


ADDED : ஏப் 16, 2025 06:26 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 06:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : புதுச்சேரியில் இருந்து காரில் மதுபாட்டில்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்துனர்.

வானுார் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கந்தன் மற்றும் போலீஸ்காரர் ஸ்ரீபன்ராஜ் ஆகியோர் நேற்றுமுன் தினம் நள்ளிரவு திருவக்கரை அரசு உயர்நிலைப் பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, திருக்கனுார் பகுதியியில் இருந்து வந்த மாருதி காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 128 புதுச்சேரி மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

காரில் வந்த நபரிடம் நடத்திய விசாரணையில், ராணிப்பேட்டை ஆற்காடு சடைய தெருவைச் சேர்ந்த சுரேஷ்பாபு, 49; என்பதும், உறவினரின் திருமண விழாவிற்கு நண்பர்களுக்கு விருந்தளிக்க புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்திச்சென்றது தெரிய வந்தது.

உடன், சுரேஷ்பாபு மீது வழக்குப்பதிந்து கைது செய்து, 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us