/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
/
மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : டிச 09, 2025 06:03 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியத்தில் பல்வேறு கட்சியிலிருந்து விலகி 250 பேர் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
விக்கிரவாண்டி வடக்கு ஒன்றியம், மண்டகப்பட்டு, டி.புதுப்பாளையம், தென்பேர், ஆசூர், பிடாரிப்பட்டு கிராமங்களில் இருந்து தி.மு.க., - ம.தி.மு.க., - பா.ம.க., - வி.சி., கட்சிகளில் இருந்து விலகி திண்டிவனத்தில், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சண்முகம் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
விக்கிரவாண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பன்னீர், பேரவை செயலாளர் சரவணகுமார், ஒன்றிய துணைச் செயலாளர் நேமூர், குமார், ஜெ., பேரவை துணைச் செயலாளர் பெரியான், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியினர் பலர் உடன் இருந்தனர்.

