sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 விவசாயி தீக்குளிக்க முயற்சி :கலெக்டர் ஆபீசில் பரபரப்பு

/

 விவசாயி தீக்குளிக்க முயற்சி :கலெக்டர் ஆபீசில் பரபரப்பு

 விவசாயி தீக்குளிக்க முயற்சி :கலெக்டர் ஆபீசில் பரபரப்பு

 விவசாயி தீக்குளிக்க முயற்சி :கலெக்டர் ஆபீசில் பரபரப்பு


ADDED : டிச 09, 2025 06:03 AM

Google News

ADDED : டிச 09, 2025 06:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: செஞ்சி அருகே பட்டா மாற்றத்தில் நடந்த முறைகேட்டைகண்டித்து விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

செஞ்சி அடுத்த மழவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர், 65; விவசாயி. இவர், நேற்று காலை 10:30 மணிக்கு, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு பட்டா மாற்றம் பிரச்னை தொடர்பாக மனு அளிக்க வந்தார்.

திடீரென கலெக்டர் அலுவலக நுழைவாயில் பகுதியில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

உடனே அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார், அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அதில், அவர் தனதுக்கு சொந்தமான நிலத்திலிருந்து 60 சென்ட் இடத்தை, உறவினர் அவரது பெயரில் முறைகேடாக பட்டா மாற்றம் செய்து கொண்டார். இதனையறிந்து செஞ்சி தாலுகா அலுவலகத்திலும், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் துறையினரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தீக்குளிக்க முயன்றதாக சேகர் தெரிவித்தார்.

உடன், போலீசார் அவரை எச்சரித்து கலெக்டரிடம் மனு அளிக்கும்படி கூறி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us