/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் புதிய சட்டங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் புதிய சட்டங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் புதிய சட்டங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் புதிய சட்டங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 09, 2025 06:03 AM

விழுப்புரம்: தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் 4 புதிய சட்ட தொகுப்புகளை திரும்ப பெறக்கோரி மா.கம்யூ., - இந்திய கம்யூ., - வி.சி., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மா.கம்யூ., மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சவுரிராஜன், வி.சி., மாவட்ட செயலாளர் பெரியார் ஆகியோர் தலைமை தாங்கினர்.
மா.கம்யூ., மாநில செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் கீதா, இந்திய கம்யூ., மாநில துணைச் செயலாளர் பெரியசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலியமூர்த்தி, சரவணன், வி.சி., பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர்கள் விடுதலைச்செல்வன், திலீபன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய பா.ஜ., அரசு, 29 தொழிலாளர் நலச்சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றியதை திரும்பப்பெற வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். 4 சட்ட தொ குப்புகளை அமல்படுத்த மாட்டோம் என, கேரளா அரசைப்போல் தமிழக அரசும் அறிவிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத் தப்பட்டது.

