ADDED : டிச 11, 2024 07:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: வளத்தியில் தமிழ்நாடு கிராம வங்கி கிளையில் நிதி மற்றும் காப்பீடு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கிளை மேலாளர் சிலம்பரசன் தலைமை தாங்கி, இறந்த பாக்கியம் என்பவரின் வாரிசுக்கு பிரதம மந்திரி ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் 2 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கி, வங்கி சேவை திட்டங்கள் குறித்து பேசினார்.
காசாளர்கள் வினோத்குமார், கார்த்திக், வங்கி வணிக தொடர்பாளர்கள், வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.

