ADDED : டிச 15, 2025 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: கொள்ளார் அரசு உயர்நிலைப் பள்ளியில் விழிப் புணர்வு ஊர்வலம் நடந்தது.
திண்டிவனம் அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் சார்பில் கொள்ளார் அரசு உயர்நிலைப் பள்ளியில், பெண்கள் வன்கொடுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை பள்ளி தலைமை யாசிரியை பவானி, மையத்தின் அறங்காவலர் நந்தினி கொடியசைத்து துவக்கி வைத்தனர். மைய ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி வரவேற்றார். ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

