ADDED : டிச 22, 2025 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தெரு நாய்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கி, கல்லுாரி வளாகத்தில் நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், நாய்கள் கடித்தால் உடனடியாக டாக்டர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் தெரிவித்து உரிய சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், தெரு நாய்களுடன் பழங்குவது அல்லது விரும்பத்தகாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தெரு நாய்கள் மேலாண்மை ஒருங்கிணைப்பாளர் தேவநாதன் செய்திருந்தார். இதில் அனைத்து பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.

