sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

முகையூர் பகுதி வாழை விவசாயிகள் : பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

/

முகையூர் பகுதி வாழை விவசாயிகள் : பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

முகையூர் பகுதி வாழை விவசாயிகள் : பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

முகையூர் பகுதி வாழை விவசாயிகள் : பயிர் காப்பீடு செய்ய அழைப்பு


ADDED : நவ 10, 2025 11:14 PM

Google News

ADDED : நவ 10, 2025 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டாச்சிபுரம்: முகையூர் வட்டார வாழை விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்து கொள்ள தோட்டக்கலை துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

முகையூர் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் பிரியதர்ஷினி செய்திக்குறிப்பு:

புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். அதன்படி வாழை விவசாயிகள் வரும் ரபி (2025) பருவத்தில் பயிரிடப்படும் வாழை பயிர்களுக்கு இயற்கை இடர்கள் மூலம் ஏற்படும் சேதங்களுக்கு காப்பீடு பெறலாம்.

எனவே, முகையூர் பகுதி வாழைப் பயிர் விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர் காப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.

எக்டர் ஒன்றுக்கு 1147.51 காப்பீடு தொகை செலுத்த வேண்டும். வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதிக்குள் காப்பீடு தொகை செலுத்தலாம்.

மேலும், தகவல்களுக்கு முகையூர் வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலர்களை தொடர்ப்பு கொண்டு தகவல் பெறலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us