ADDED : நவ 10, 2025 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: வானுார் அருகே வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வானுார் அடுத்த நாராயணபுரம் சர்க்கரை ஆலை ரோட்டைச் சேர்ந்தவர் செல்வம் (எ) அய்யனார், 47; விவசாயி.
இவர் தனது டவேரா காரை கடந்த 8ம் தேதி இரவு வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்தார். 9ம் தேதி காலை பார்த்தபோது காரை காணவில்லை.
இதுகுறித்து அவர் 10ம் தேதி அளித்த புகாரின் பேரில், வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

