/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குளத்தில் விழுந்து சிறுவன் பலி
/
குளத்தில் விழுந்து சிறுவன் பலி
ADDED : நவ 23, 2025 06:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை அருகே குளத்தில் மீன் பிடித்த சிறுவன் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார்.
அவலுார்பேட்டை அடுத்த கப்ளாம்பாடி, சாமந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு மகன் கார்த்திகேயன், 13; கப்ளாம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மதியம் 1:30, மணிக்கு அதே பகுதியில் உள்ள குளத்தில் மீன் பிடித்தார். அப்போது தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார்.
அவரது தாய் அலமேலு, 46; அளித்த புகாரின் பேரில், அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

