/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கடையில் தகராறு 2 பேர் மீது வழக்கு
/
கடையில் தகராறு 2 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 12, 2025 05:08 AM
விழுப்புரம் : வளவனுார் அருகே சிக்கன் கடையில் ஏற்பட்ட தகராறில் 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கோலியனுாரைச் சேர்ந்த கண்ணப்பன் மனைவி ராதா, 55; அதே பகுதியில் சிக்கன் கடை வைத்துள்ளார்.
வளவனுார் அடுத்த நரையூர் காலனியைச் சேர்ந்தவர் வேலு, 47; இவர், கடந்த 2ம் தேதி, சிக்கன் கடைக்கு வந்தவர் ஒரு கிலோ கோழி கறி 240 ரூபாய் கொடுத்துவாங்கி சென்றார்.
சிறிது நேரத்தில் திரும்பி வந்த வேலு, பிற கடைகளில் விலை குறைவாக விற்பதாகவும், நீங்கள் ஏன் அதிக விலைக்கு விற்கிறீர்கள் என கேட்டு ராதாவிடம் தகராறு செய்து, அவரை திட்டி, தாக்கினார். ராதா தரப்பினர் வேலுவை தாக்கினர்.
இரு தரப்பு புகாரின் பேரில், ராதா, வேலு ஆகியோர் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.