/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது வழக்கு
/
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது வழக்கு
ADDED : ஜூலை 14, 2025 03:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் : வானுார் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது பெண். இவர், வானுார் அடுத்த பூத்துறையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம், அந்த பெண்ணுக்கு கடலுார் அடுத்த கிலிஞ்சிக் குப்பத்தைச் சேர்ந்த சத்திய ராஜ், 45; என்பவர் பாலியல் ரீதியாக தெல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில், சத்தியராஜ் மீது ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.