sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விழுப்புரம் சிறையில் காவலரை மிரட்டிய கைதி மீது வழக்கு

/

விழுப்புரம் சிறையில் காவலரை மிரட்டிய கைதி மீது வழக்கு

விழுப்புரம் சிறையில் காவலரை மிரட்டிய கைதி மீது வழக்கு

விழுப்புரம் சிறையில் காவலரை மிரட்டிய கைதி மீது வழக்கு


ADDED : அக் 26, 2025 04:59 AM

Google News

ADDED : அக் 26, 2025 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட சிறையில், காவலரை மிரட்டிய கைதி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், பொய்யாக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன், 38; இவர், காஞ்சிபுரம் மாவட்ட போலீசாரால், பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, விழுப்புரம் நீதிமன்ற விசாரணைக்கு அவரை ஆஜர்படுத்துவதற்காக, கடந்த 21ம் தேதி விழுப்புரம், வேடம்பட்டு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 21ம் தேதி கிளைச் சிறையில் பணியிலிருந்த காவலர் சிவராமன், சிறையின் வளாகத்திலிருந்த தியாகராஜனை, சிறை அறைக்குள் செல்லுமாறு கூறியுள்ளார்.

அப்போது, உள்ளே செல்ல முடியாது எனக் கூறி தகராறு செய்து, அவரை திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டியுள்ளார்.

இது குறித்து, வேடம்பட்டு சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) பாலாஜி அளித்த புகாரின் பேரில், தியாகராஜன் மீது காணை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us