ADDED : நவ 12, 2025 03:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் குடிபோதையில் தாயை தாக்கிய மகன் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் ஊரல் கரைமேடு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி, 40; கூலித் தொழிலாளி. கருத்து வேறுபாட்டால் இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.
இதனால், விரக்தியில் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து, அவரது தாய் பவுனம்பாளை, 60; தாக்கி வந்துள்ளார். கடந்த 4ம் தேதி போதையில் வீட்டிற்கு வந்தவர், தாயை தாக்கியுள்ளார்.
புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார், பாலாஜி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

