/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தகராறில் தாக்குதல் 4 பேர் மீது வழக்கு பதிவு
/
தகராறில் தாக்குதல் 4 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : ஏப் 28, 2025 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: தகராறில் தாக்கிக்கொண்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் சேவியர் காலனியைச் சேரந்தவர் மைக்கல் மகன் ஷாம், 23; இவரது தம்பி தேவா, 22; உறவினர் எழில் ஆகியோருடன் முத்தோப்பு மைதானத்தில் நேற்று முன்தினம் கிரிக்கெட் விளையாடினர்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீபன், ஜெபஸ்டின் ஆகியோர் கிண்டல் செய்தனர். இதனால், ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.
இருதரப்பு புகாரின்பேரில், ஸ்ரீபன், ஜெபஸ்டின், தேவா, ஷாம் ஆகிய 4 பேர் மீது விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.