sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கால்வாய் துார் வாரும் பணி திண்டிவனத்தில் கலெக்டர் ஆய்வு

/

கால்வாய் துார் வாரும் பணி திண்டிவனத்தில் கலெக்டர் ஆய்வு

கால்வாய் துார் வாரும் பணி திண்டிவனத்தில் கலெக்டர் ஆய்வு

கால்வாய் துார் வாரும் பணி திண்டிவனத்தில் கலெக்டர் ஆய்வு

1


ADDED : அக் 18, 2024 11:32 PM

Google News

ADDED : அக் 18, 2024 11:32 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சியில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள கால்வாய்களை துார் வாரும் பணி நடந்தது.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டிவனம் நகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் துார்வாரும் பணிகள் நடக்கிறது. கர்ணாவூர் பாட்டைக்குச் செல்லும் ஓடை துார்வாரும் பணியை கலெக்டர் பழனி ஆய்வு செய்து, கழிவுகளை உடனுக்குடன் நகராட்சி வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்துவதோடு, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சம்பந்தபட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

காந்தி நகர், வெள்ளவாரி வாய்க்கால், நகராட்சி காம்ப்ளக்ஸ் பகுதிக்கு செல்லும் வாய்க்கால் துார்வாரும் பணியையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து, அவரப்பாக்கத்தில், பெலாக்குப்பம் சாலையில் உள்ள ஏரியில் இருந்து கிடங்கல் 1க்கு உபரிநீர் செல்லும் வாய்க்கால் துார்வாரும் பணி, பட்டணம், பெலாக்குப்பம் செல்லும் சிட்கோ தொழிற்பேட்டை சாலையில் தெருவிளக்கு பொருத்தும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

சப் கலெக்டர் திவ்யானசு நிகாம், நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் கவிதா, கமிஷனர் குமரன், தாசில்தார் சிவா பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us