ADDED : செப் 23, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரம் அருகே மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.
நன்னாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சூரியன் மகள் இந்துமதி, 19; விழுப்புரம் அரசு கல்லுாரியில் பி.எஸ்சி., படித்து வருகிறார்.
இவர், கடந்த 20ம் தேதி கல்லுாரி செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.
அவரது தாய் ேஹமாவதி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.