ADDED : செப் 13, 2024 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: துாங்கி கொண்டிருந்த போது விஷ பூச்சி கடித்து ஒருவர் இறந்தார்.
செஞ்சி, கிருஷ்ணாபுரம் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி மகன் பாலகிருஷ்ணன் 55. இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் படுத்துக் கொண்டு இருந்தபோது விஷப்பூச்சி கடித்துள்ளது. அவரை, உடனடியாக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார்.
செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

