sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பொது அறிவை வளர்ப்பதில் தினமலரின் சேவை பாராட்டுக்குரியது முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் 'பளீச்'

/

பொது அறிவை வளர்ப்பதில் தினமலரின் சேவை பாராட்டுக்குரியது முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் 'பளீச்'

பொது அறிவை வளர்ப்பதில் தினமலரின் சேவை பாராட்டுக்குரியது முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் 'பளீச்'

பொது அறிவை வளர்ப்பதில் தினமலரின் சேவை பாராட்டுக்குரியது முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் 'பளீச்'


ADDED : அக் 16, 2025 11:35 PM

Google News

ADDED : அக் 16, 2025 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: 'பட்டம் மேல்நோக்கி பறப்பதை போல், மாணவர்களின் அறிவும் பெருகி சாதிக்க வேண்டும்' என முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் பேசினார்.

விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், நேற்று நடந்த 'தினமலர்-பட்டம்' இதழ் வினாடி வினா நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

நாட்டின் வருங்கால துாண்களான மாணவர்களை மேம்படுத்தும் பணியில், தினமலர் நாளிதழின் சேவை பாராட்டுக்குரியது. 'தினமலர் - பட்டம்' இதழ், பள்ளி மாணவர்களுக்கான பொது அறிவு திறவுகோளாக திகழ்கிறது. பாட புத்தகங்களை காட்டிலும் செய்திதாள்கள் அதிகம் பொது அறிவை வளர்க்கிறது.

ஐ.ஏ.எஸ்., பணி வரையிலான போட்டி தேர்வுகளில் சாதிப்பதற்கு, தினசரி செய்தி தாள்களும், புத்தகங்களும், இதுபோன்ற வினாடி வினா போட்டிகளும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில், செய்தித் தாள்களின் பங்கு முதன்மையானதாகும்.

இன்றைய சூழலில் மாறுபட்ட கருத்துகள், பல்துறை அறிவு அவசியமாகிறது. தன்னை முன்னிலைப்படுத்தி, தயக்கமின்றி திறனை வெளிப்படுத்துபவர்களே சாதிக்கின்றனர்.

முதன் முதலில், தயக்கமின்றி நிலவில் கால் வைத்த நீல்ஆம்ஸ்ட்ராங் தான் உலகளவில் புகழப்பட்டார். இந்த சமூகத்தில், தைரியத்தோடு முன்வந்து, திறனை வெளிப்படுத்துபவர்களே வெற்றி பெறுகிறார்கள். எல்லாவற்றிற்கும் சுய ஒழுக்கம் அவசியம். அப்போதுதான் சமுதாய ஒழுக்கமும் வரும்.

அரசு போட்டித் தேர்வுகளுக்காக படிக்கும் வாய்ப்புகள் இப்போது அதிகம் கிடைக்கிறது. ஏராளமான புத்தகங்கள், செய்தித் தாள்களை தொடர்ந்து படிக்க வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் பங்கேற்ற 21 ஆயிரம் பேரில் 300 பேர் தான் தோல்வியடைந்தனர். அவர்களுக்கும் உடனடி தேர்வு, உயர்கல்வி வாய்ப்புக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இனி வருங்காலங்களில், ஒருவர் கூட தோல்வியடைய கூடாது. இதற்கு 'தினமலர்-பட்டம்' இதழ் ஒரு முன்னுதாரணம். பட்டம் மேல்நோக்கி பறப்பதை போல், மாணவர்களின் அறிவும் பெருக வேண்டும். பட்டம் போல் உயர, உயர மாணவர்கள் அறிவும் இந்த இதழ் மூலம் உயரும். இவ்வாறு சி.இ.ஓ., அறிவழகன் பேசினார்.






      Dinamalar
      Follow us