/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு டாக்டரிடம் தகராறு; தி.மு.க., பிரமுகர் மீது புகார்
/
அரசு டாக்டரிடம் தகராறு; தி.மு.க., பிரமுகர் மீது புகார்
அரசு டாக்டரிடம் தகராறு; தி.மு.க., பிரமுகர் மீது புகார்
அரசு டாக்டரிடம் தகராறு; தி.மு.க., பிரமுகர் மீது புகார்
ADDED : ஜன 02, 2025 07:21 AM
விழுப்புரம்; வானுார் அரசு மருத்துவமனையில் தகராறு செய்ததாக அரசு டாக்டர் ஒருவர், தி.மு.க., பிரமுகர் மீது புகாரளித்துள்ளார்.
திண்டிவனம் வகாப் நகரை சேர்ந்தவர் அரசு மருத்துவர் சுரேஷ்குமார்,37; நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டும் வானுார் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்தார்.
அப்போது, அங்கு வந்த வானுார் அடுத்த எறையூரைச் சேர்ந்த தி.மு.க., கிளை செயலர் ரவிச்சந்திரன்,40; ஒருவரின் ஆதார் கார்டில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும், அதற்கு டாக்டர் கையெழுத்து போட வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அதற்கு டாக்டர் சுரேஷ்குமார் மறுத்ததால், இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 3 பேர், தன்னை ஆபாசமாக பேசி, பணி செய்ய விடாமல் தடுத்ததாக, டாக்டர் சுரேஷ்குமார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதே போல் தி.மு.க., பிரமுகர் ரவிச்சந்திரனும், டாக்டர் மீது போலீசில் புகாரளித்துள்ளார். இது குறித்து, வானுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.