ADDED : நவ 15, 2025 05:04 AM

செஞ்சி: செஞ்சியில், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்ட அவைத் தலைவர் சேகர் தலைமை தாங்கினார். தொகுதி பார்வையாளர்கள் புகழேந்தி, ஜாபர் அலி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவிக்குமார், அருணகிரி, அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயற்குழு உறுப்பினர் விஜயகுமார் வரவேற்றார். மண்டல பொறுப்பாளர் வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், செந்தமிழ்ச்செல்வன், சீத்தாபதி சொக்கலிங்கம், தலைமை தீர்மானக் குழு உறுப்பினர் சிவா, இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி.
ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, துரை, இளம்வழுதி, பச்சையப்பன், விஜயராகவன், நாராயணமூர்த்தி, சாந்தி சுப்ரமணியன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் அன்று மாவட்டம் முழுதும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி, மாணவர்களுக்கு கல்வி உபகரகணங்கள் வழங்குவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செயற்குழு உறுப்பினர் நெடுஞ்செழியன் நன்றி கூறினார்.

