/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஆக 15, 2025 11:05 PM
திண்டிவனம்,; திண்டிவனம் புனித பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திண்டிவனம் மாவட்ட கல்வித்துறை, அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி தலைமை தாங்கினார்.
பள்ளி தாளாளர் அருட் சகோதரி மார்க், தலைமை ஆசிரியை இந்திரா முன்னிலை வகித்தனர். அதேகொம் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி வரவேற்றார். சப் இன்ஸ்பெக்டர் தமிழரசி. ஏட்டு பொம்மி. ஆரம்ப சுகாதார செவிலியர்கள் சசிகலா. கயல்விழி, சிவரஞ்சனி பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், போதைப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றியும், போதைப் பொருட்கள் ஒழிப்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

