ADDED : நவ 18, 2025 07:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: கோட்டக்குப்பம் உட்கோட்ட டி.எஸ்.பி., நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோட்டக்குப்பம் உட்கோட்ட டி.எஸ்.பி.,யாக இருந்த உமாதேவி, விழுப்புரம் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கடலுார் டவுன் டி.எஸ்.பி.,யாக இருந்த ரூபன்குமார், கோட்டக்குப்பம் டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டு நேற்று, பொறுப்பேற்று கொண்டார்.
இவருக்கு இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

