/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பூச்சி மருந்து குடித்த முதியவர் பலி
/
பூச்சி மருந்து குடித்த முதியவர் பலி
ADDED : அக் 19, 2025 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: பூச்சி மருந்தை குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
செஞ்சி, அடுத்த ஆர் நயம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராமன், 75; வயது முதிர்வு காரணமாக கண் பார்வை இல்லாமலும், காது கேட்காமலும் இருந்தார்.
இதனால் மனம் உடைந்தவர் கடந்த 9ம் தேதி தற்கொலை செய்து கொள்வதற்காக பூச்சி மருந்தை குடித்தார். அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.