ADDED : ஏப் 07, 2025 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டமங்கலம்; கண்டமங்கலம் அடுத்த பெரிய பாபுசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 90; இவர், நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்து பக்கிரிப்பாளையத்தில் உள்ள மகள் வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு நடந்து சென்றார்.
கலித்திரம்பட்டு அருகே சங்கராபரணி ஆற்றில் இறங்கி கரையை கடக்க முயன்றார். அப்போது சேற்றில் சிக்கிய அவர் ஆற்று நீரில் மூழ்கி இறந்தார்.
கண்டமங்கலம் போலீசார், உடலை மீட்டு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.