ADDED : அக் 25, 2024 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: காணை அருகே அரசு பஸ் மோதி முதியவர் இறந்தார்.
காணை அருகே கொண்டங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிகோவிந்தன், 81; இவர், நேற்று முன்தினம் விழுப்புரம் - திருக்கோவிலுார் நெடுஞ்சாலையை நடந்து கடந்த போது, எதிரே விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலுார் நோக்கிச் சென்ற அரசு பஸ் மோதியது.
இதில், ஹரிகோவிந்தன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
காணை போலீசார், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.