/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
/
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
ADDED : நவ 01, 2025 02:48 AM
விழுப்புரம்: மாவட்டத்தில் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு நாள் கூட்டம் நடக்கிறது.
விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நாகராஜ் குமார் செய்திக்குறிப்பு:
நவம்பர் மாதத்திற்கான கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு நாள் கூட்டம் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 11:00 மணியளவில் நடக்கிறது.
வரும் 4ம் தேதி விழுப்புரம் செயற்பொறியாளர் அலுவலகம்; 11ம் தேதி கண்டமங்கலம் செயற்பொறியாளர் அலுவலகம்; 18ம் தேதி செஞ்சி செயற்பொறியாளர் அலுவலகம்; 25ம் தேதி திண்டிவனம் செயற்பொறியாளர் அலுவலகம்; 27ம் தேதி திருவெண்ணெய்நல்லுார் செயற்பொறியாளர் அலுவலகம் ஆகியவற்றில் கூட்டம் நடக்கிறது. இதில், மின் நுகர்வோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

