/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கனமழையால் எல்லீஸ் அணைக்கட்டு நிரம்பியது
/
கனமழையால் எல்லீஸ் அணைக்கட்டு நிரம்பியது
ADDED : டிச 01, 2025 05:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: டிட்வா புயல் கனமழையையொட்டி, சாத்தனுார் அணைக்கட்டிலிருந்து வெளியேறிய தண்ணீர் விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது.
டிட்வா புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனுார் அணை நீர் பிடிப்பில் கனமழை பெய்ததால் அணை நிரம்பி உபரிநீர் நேற்று முன்தினம் வெளியேற்றப்பட்டது.
இந்த தண்ணீர், விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றில் நேற்று முன்தினம் இரவு முதல் கரைபுரண்டு ஓடத் துவங்கியது. விழுப்புரம், எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டில், தண்ணீர் ஆர்ப்பரித்து இரு கரைகளையும் தொட்டபடி செல்கிறது.

