sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 வீடூர் அணையில் தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றம்

/

 வீடூர் அணையில் தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றம்

 வீடூர் அணையில் தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றம்

 வீடூர் அணையில் தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றம்


ADDED : டிச 05, 2025 06:02 AM

Google News

ADDED : டிச 05, 2025 06:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: டிட்வா புயல், மழை காரணமாக வீடூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் அணையிலிருந்து உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.

வீடூர் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை காரணமாக நீர்வரத்து காரணமாக நேற்று காலை 6:00 மணியளவில் முழு கொள்ளளவான 32 அடியில் (605 மில்லியன் கன அடி) 29 அடியை (391.384 மில்லியன் கன அடி) இருப்பு இருந்தது.

அணை நீர் பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக காலை 6:00 மணியிலிருந்து அணைக்கு வினாடிக்கு 953 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. இதனால், அணையில் இருந்து 900 கன அடி உபரி நீர் ஒரு மதகை திறந்து வெளியேற்றப்பட்டது.

9:00 மணியளவில் அணைக்கு வினாடிக்கு 1853 கன அடி தண்ணீர் வரத்து வந்தது. அணையிலிருந்து 1800 கன அடி உபரி நீர் மூன்று மதகை திறந்து வெளியேற்றப்பட்டது. பகல் 12:00 மணி அளவில் வினாடிக்கு 4,553 கன அடி தண்ணீர் வரத்து வந்தது. அணையிலிருந்து 4,500 கன அடி உபரி நீர் ஐந்து மதகை திறந்து வெளியேற்றப்பட்டது.

1:00 மணியளவில் வினாடிக்கு 1,853 கனஅடியாக தண்ணீர் வரத்து குறைந்தது .இதை அடுத்து அணையின் மூன்று மதகுகளை திறந்து 1800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

மாலை 4:00 மணியளவில் அணைக்கு வினாடிக்கு 953 கனஅடியாக தண்ணீர் வரத்து குறைந்தது அணையின் ஒரு மதகை திறந்து 900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us