sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மின் இணைப்பு துண்டிப்பை தவிர்க்க செயற்பொறியாளர் வேண்டுகோள்

/

மின் இணைப்பு துண்டிப்பை தவிர்க்க செயற்பொறியாளர் வேண்டுகோள்

மின் இணைப்பு துண்டிப்பை தவிர்க்க செயற்பொறியாளர் வேண்டுகோள்

மின் இணைப்பு துண்டிப்பை தவிர்க்க செயற்பொறியாளர் வேண்டுகோள்


ADDED : செப் 30, 2024 06:20 AM

Google News

ADDED : செப் 30, 2024 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டமங்கலம்: மின்நுகர்வோர்கள் இணைப்பு துண்டிக்கப்படுவதை தவிர்க்க கெடு தேதிக்குள் மின் கட்டணம் செலுத்தி, மின் இணைப்பு துண்டிப்பை தவிர்க்கலாம்.

இது குறித்து கண்டமங்கலம் மின்வாரிய கோட்ட செயற் பொறியாளர் சிவகுரு செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதி எண்.14ன் படி ஒரு மின் நுகர்வோர் தங்களுக்கு மின் கணக்கீடு செய்யப்பட்ட நாளிலிருந்து 5 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும்.

செலுத்த தவறினால் அடுத்த 15 நாட்கள் மின் கட்டணம் செலுத்த நோட்டீஸ் காலமாகும். இங்கு நோட்டீஸ் என்பது தங்களது வெள்ளை மின் கட்டண அட்டையில் மின் கட்டண விவரங்களை குறிப்பதாகும்.

அதாவது மின் கணக்கீடு செய்த நாளிலிருந்து 20 நாட்கள் வரையிலும் மின் கட்டணம் செலுத்தலாம். 21ம் நாள் அல்லது அடுத்த வேலை நாளில் மேலும் அறிவிப்பின்றி மின் துண்டிப்பு செய்யப்படும்.

செலுத்த தவறிய மின் கட்டணத்திற்கு தங்களது மின் கட்டண தொகையில் 1.5 சதவீதம் வசூலிக்கப்படும். மேலும் இதனுடன் மறு மின் இணைப்பு கட்டணமும் சேர்த்து வசூல் செய்யப்படும்.

மின் கட்டண விவரங்கள் எங்களது வலை தளத்தில் உடனுக்குடன் பதிவேற்றப்படுகிறது. தங்களது சரியான கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து, மின் கட்டண விவரங்களை உடனுக்குடன் முழுமையாக அறிந்து, 2 மாதங்களுக்கு ஒரு முறை கெடு தேதிக்குள் மின் கட்டணத்தை செலுத்தி மின் துண்டிப்பை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us