ADDED : மே 07, 2025 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: தனியார் பஸ் மோதிய விபத்தில், பைக்கில் சென்ற விவசாயி இறந்தார்.
விழுப்புரம் சங்கரமடம் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீராம், 64; விவசாயி. இவர், நேற்று காலை தனது எலட்ரிக் பைக்கில், பண்ருட்டி மார்க்கத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்தார். சுந்தரிப்பாளையம் பாலம் அருகே வந்தபோது, பின்னால் வந்த தனியார் பஸ், பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த ஸ்ரீராம் சம்பவ இடத்திலேயே இறந்தார். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.