நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்; புற்றுநோயால் அவதிப்பட்ட பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வானுார் அடுத்த பெரம்பை கிராமத்தை சேர்ந்தவர் பாலு. கொத்தனார். இவரது மனைவி மங்கவரம் 37; இவர்
கடந்த சில மாதங்களாக கர்ப்பப்பை புற்றுநோய் கட்டியால் அவதிக்குள்ளாகி வந்தார். நாளுக்கு நாள் நோய் முற்றியதால், வலி தாங்க முடியாமல் நேற்று அதிகாலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.