/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஷேர் ஆட்டோவுக்கு தீ: போலீஸ் விசாரணை
/
ஷேர் ஆட்டோவுக்கு தீ: போலீஸ் விசாரணை
ADDED : நவ 02, 2025 10:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: ஷேர் ஆட்டோவிற்கு தீ வைத்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவைச் சேர்ந்தவர் கலைச்செல்வன், 35; இவர் தனது ஷேர் ஆட்டோவை, விழுப்புரம் அருந்ததியர் தெரு அங்கன்வாடி அருகே நேற்று முன்தினம் இரவு நிறுத்தியிருந்தார். இந்நிலையில், அந்த ஆட்டோவை மர்மநபர் தீயிட்டு எரித்துள்ளனர்.
புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து ஆட்டோவை தீயிட்டு கொளுத்திய நபர் குறித்து விசாரிக்கின்றனர்.

