
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம் : பாதிராப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் சார்பில் நாட்டு நலப் பணி திட்ட நிறைவு விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் குமரவேல் தலைமை தாங்கினார். சிருஷ்டி பவுண்டேஷன் மேலாளர் கணேசன், மகளிர் நல அறக்கட்டளை நிர்வாகி அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் பஞ்சாட்சரம் வரவேற்றார். சென்னை அரசு பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர், வி.ஏ.ஓ., கலைச்செல்வன், உயிர் பதிப்பக நிறுவனர் சண்முகநாதன், தமிழ்வேந்தன் துவக்க உரையாற்றினர்.
இதில், சென்னை பல்கலை துணை பதிவாளர் தமிழ்வாணன் பேசுகையில்,' மாணவர்கள் படிக்கும் காலத்தில் பாடங்களை நன்றாக கவனித்து போட்டித் தேர்வுகளுக்கு தயாராக வேண்டும்,' என்றார். மாணவி யுவராணி நன்றி கூறினார்.