/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயான கொள்ளை ஊர்வலம் ராமதாஸ் வீடு அருகே தடியடி
/
மயான கொள்ளை ஊர்வலம் ராமதாஸ் வீடு அருகே தடியடி
ADDED : பிப் 17, 2026 05:55 AM

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் -- செஞ்சி சாலையில் உள்ள அங்காளம்மன் கோவிலில் கடந்த முறை நடந்த மயான கொள்ளையின்போது, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வீடு அருகே அரசியல் கட்சிகளுக்குள் கொடியை காண்பித்து ஆடியது தொடர்பாக மோதல் ஏற்பட்டது.
அதனால், நேற்று நடந்த மயான கொள்ளை ஊர்வலத்தின் போது, 'கட்சி கொடி பயன்படுத்த கூடாது' என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இருப்பினும், பலர் கொடி பிடித்து ஆட்டம் பாட்டமாக வந்தனர். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வீடு அமைந்துள்ள காமாட்சியம்மன் கோவில் தெருவில், பா.ம.க,,வினர் மேளதாளத்துடன் ஆடியபடி வந்த போது, போலீசார், ஊர்வலத்தை முடித்து செல்லுமாறு கூறினார்.
அப்போது, பா.ம.க.,வினருக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட, போலீசார் தடியடி நடத்தி கும்பலை கலைத்தனர். பொதுமக்கள், பக்தர்கள் நாலா பக்கமும் சிதறி ஓடியதால், பதற்றம் ஏற்பட்டது. தடியடியில், பெண் உட்பட மூவர் காயமடைந்தனர்.

