ADDED : பிப் 17, 2026 05:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி பகுதியில் கடைகளில் குட்கா விற்கப்படுவதாக போலீசுக்கு புகார் வந்தது. அதன் பேரில், இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையிலான போலீசார் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, மேல்பாதியில் பிரபு, 45; என்பவரது கடையில் குட்கா பொருட்கள் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது.
உடன், அவர் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்து, 42,500 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், அவருக்கு குட்காவை சப்ளை செய்த ஆண்டியார்பாளையத்தைச் சேர்ந்த பாலச்சந்தர் என்பவரை தேடி வருகின்றனர்.

