ADDED : நவ 14, 2025 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே குட்கா கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் மற்றும் போலீசார், வளவனுார் அடுத்த கல்லப்பட்டு கிராமம் அருகே ரோந்து சென்றனர். அப்போது பைக்கில் குட்கா கடத்தி வந்த விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவைச் சேர்ந்த பிரம்மராஜ், 34; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து குட்காவை பறிமுதல் செய்தனர்.

