நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அயோத்தி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.
கண்டாச்சிபுரம் அயோத்தி ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவ மூர்த்தி ஆஞ்ச நேயருக்கு தீபாரதனை நடைபெற்றது. முன்னதாக பஜனை உர்வலம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பிற்பகல் உற்சவ மூர்த்தி சுவாமிகள் ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானப் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் கண்டாச்சிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.