sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விழுப்புரத்தில் ெஹல்மெட் சோதனை தீவிரம்: விதி மீறியோரிடம் ரூ.2.91 லட்சம் வசூல்

/

விழுப்புரத்தில் ெஹல்மெட் சோதனை தீவிரம்: விதி மீறியோரிடம் ரூ.2.91 லட்சம் வசூல்

விழுப்புரத்தில் ெஹல்மெட் சோதனை தீவிரம்: விதி மீறியோரிடம் ரூ.2.91 லட்சம் வசூல்

விழுப்புரத்தில் ெஹல்மெட் சோதனை தீவிரம்: விதி மீறியோரிடம் ரூ.2.91 லட்சம் வசூல்


ADDED : டிச 17, 2024 05:37 AM

Google News

ADDED : டிச 17, 2024 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் வட்டார போக்குவரத்து துறை சார்பில், ெஹல்மட் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் 291 பேர் மீது இந்தாண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஆன்லைன் மூலம் 2.91 லட்சம் ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகர்புறம், கிராமப்புற சாலைகள் மட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் போக்குவரத்து நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இந்த வாகனங்களில் பெரும்பாலும் இருசக்கர வாகனங்கள் அதிகமாக செல்கின்றன.

இந்த இருசக்கர வாகனங்களில் பாதுகாப்பாக செல்வதற்காக, வட்டார போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து போலீசார், பல்வேறு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். இந்த விதிமுறைகளை இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிதளவு கூட கடைபிடிப்பதில்லை. இருசக்கர வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்வதற்காக தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், இரண்டு பேருக்கு மேல் செல்லக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

ஆனால், விதிமுறையை மீறி இருசக்கர வாகனங்களில் 4 பேர் வரை ெஹல்மெட் பயணம் செய்கின்றனர். இதனால், விபத்துகளில் சிக்குவதோடு, தங்களின் உயிரையும் இழக்கின்றனர்.

இதையொட்டி, விழுப்புரம் வட்டார போக்குவரத்து துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நகர்புறம், கிராமப்புற மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் ெஹல்மெட் போடாமல் செல்லும் வாகன ஓட்டிகளை முதல் கட்டமாக எச்சரித்தும், பின் 500, 1000 என அபராதம் விதித்தனர். இந்த ெஹல்மெட் கெடுபிடிக்கு, பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதால், அதிகாரிகள் தங்களின் சோதனை கெடுபிடியை கைவிட்டனர்.

இந்நிலையில், ஐகோர்ட் மூலம் மீண்டும் ெஹல்மெட் கட்டாயத்தை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, காவல் துறை டி.ஜி.பி., சங்கர் ஜூவால், ெஹல்மெட் அணியாதோர் மீது வழக்குப் பதிந்து அபராதம் வசூலிக்க வேண்டும். இது தொடர்பாக போலீசார் தீவிர வாகன சோதனை செய்யவும் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி, விழுப்புரம் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளின் ெஹல்மெட் சோதனையை தீவிரமாக்கியுள்ளனர்.

விழுப்புரம் வட்டார போக்குவரத்துத் துறை மூலம் இந்தாண்டு கடந்த ஜனவரி மாதம் முதல் டிசம்பர் வரை, ெஹல்மெட் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் 291 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆன்லைனில் அபராதமாக 2.78 லட்சம் ரூபாயும், உடனடி அபராதமாக 13 ஆயிரம் ரூபாய் என 2.91 லட்சம் சூலிக்கப்பட்டுள்ளது.

துணை போக்குவரத்து ஆணையர் பட்டாப்சாமி உத்தரவின் பேரில், விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து போலீசாரின் ெஹல்மெட் சோதனை தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us