/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆரோவில்லில் 'ஹம்மிங் கல்' ; மன அமைதிக்காக உருவாக்கம்
/
ஆரோவில்லில் 'ஹம்மிங் கல்' ; மன அமைதிக்காக உருவாக்கம்
ஆரோவில்லில் 'ஹம்மிங் கல்' ; மன அமைதிக்காக உருவாக்கம்
ஆரோவில்லில் 'ஹம்மிங் கல்' ; மன அமைதிக்காக உருவாக்கம்
ADDED : பிப் 10, 2025 06:53 AM

விழுப்புரம்; ஆரோவில் ஸ்வரம் இசை மையத்தில் நிறுவப்பட்டுள்ள, 'ஹம்மிங் கல்' பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ., தொலைவில், சர்வதேச நகரமான ஆரோவில் அமைந்துள்ளது. இங்கு செயல்பட்டு வரும், 'ஸ்வரம்' இசை மையத்தில், இசை கலைஞர்களின் முயற்சியால், தனித்துவம் வாய்ந்த, 'ஹம்மிங் கல்' உருவாக்கி, நிறுவப்பட்டுள்ளது.
ஆறடி உயரத்தில் நீள் சதுர வடிவில் உள்ள இந்த 'ஹம்மிங் கல்' பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் என, தனித்தனி இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த கல்லின் மேல் பகுதியில் ஒருவரின் தலை உள்ளே நுழையும் அளவிற்கு வட்ட வடிவில் துவாரம் உள்ளது. இந்த துவாரத்தின் உள்ளே ஒருவர் தங்களின் தலையை வைத்து, ஹம் என, 'ஹம்மிங்' செய்தால், புனிதமான 'ஓம்' என்ற ஒலி உருவாகி, எதிரொலிக்கிறது. இது, உடல் மற்றும் மனதுக்கு அமைதியை தருவதோடு, ஒத்திசைவான அதிர்வுகளை வழங்குகிறது. ஹம்மிங் கல் பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை தருவதாக உள்ளது.
இந்த ஹம்மிங் கல், ஆரோவில் ஸ்வரம் இசை மையத்தின் திறமையான கைவினைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. கலைஞர்களின் ஒரு மாத உழைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.