ADDED : அக் 12, 2025 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : குடிக்க பணம் தர மறுத்த மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி மகன் வீரபாண்டியன், 45; கூலித் தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள இவர், கடந்த 8ம் தேதி மாலை தனது மனைவி யசோதையிடம், 36; குடிக்க பணம் கேட்டார்.
அவர் பணம் தர மறுத்ததால், குத்து விளக்கால் கையில் குத்தி காயப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தார். யசோதை கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து வீரபாண்டியனை கைது செய்தனர்.