ADDED : செப் 18, 2024 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்,: மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
திண்டிவனம், டி.எம்.ஜி.நகரில் வசித்தவர் குணசேகரன், 52; இவரது மனைவி கடந்த ஏப்.,மாதம் இறந்துவிட்டார். இதனால் குணசேகரன் மன வருத்தத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த குணசேரன், மின்விசிறியில் புடவையால் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மகன் பிரகாஷ்ராஜ்,29; கொடுத்துள்ள புகாரின் பேரில், திண்டிவனம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.