/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கூட்டுறவு வங்கி உதவியாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு
/
கூட்டுறவு வங்கி உதவியாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு
கூட்டுறவு வங்கி உதவியாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு
கூட்டுறவு வங்கி உதவியாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு
ADDED : பிப் 04, 2025 06:17 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து, நகை, பணத்தை திருடிய நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த கண்டமானடியை சேர்ந்தவர் முருகன் மகன் பிரபு,36; இவர், விழுப்புரத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் உதவியாளராக பணிபுரிகிறார். இவர், கடந்த 30ம் தேதி இரவு வீட்டை பூட்டி கொண்டு தனது குடும்பத்தோடு சொந்த ஊரான சித்தலிங்கமடம் கிராமத்திற்கு சென்றார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டிற்க வந்தபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த இரண்டரை சவரன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது.
புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.